5
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., பாண்டி 52. இவர் அங்குள்ள வியாபாரிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டும் வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து இச்சம்பவத்தில் உண்மை தன்மை குறித்து விசாரிக்க எஸ்.பி., ஓம் பிரகாஷ் அறிவுறுத்தினார். எஸ்.பி., பரிந்துரையில் பாண்டியை சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் காமினி உத்தரவிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல் துணை கோட்டங்களில் பணியாற்றிய பாண்டி, மது விலக்கு பிரிவில் பணியாற்றிய போது லஞ்சப் புகாரில் ஏற்கனவே சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.