மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கம்,இம்ப்காப்ஸ், உலகத் தமிழ் மருத்துவக் கழகம், மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில் சங்கம் (மடீட்சியா) இணைந்து “தமிழ்மொழி வரலாறும் தமிழர் மருத்துவ அறிவியலும்”என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம், சித்த மருத்துவத்தின் வரலாறு,கல்வெட்டு, இலக்கியத்தில் தமிழ் மருத்துவக் குறிப்புகள் குறித்த குழு விவாதம், மாநாட்டு மலர் வெளியீடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மடீட்சியா தலைவர் கே.பி.முருகன்,தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தர் ம.திருமலை, முன்னாள் தலைமை இயக்குநர் இராமசுவாமி, எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன், தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர் சங்கம் பிச்சையா குமார், கோகிலா மருத்துவமனை சரவணபாண்டியன், டாக்டர்.ஜெயவெங்கடேஷ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.