உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பாமக சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் பாமக சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும், விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போலி மருந்துகளை விற்பணை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், செல்லம்பட்டி கனரா வங்கியில் விவசாய கடன் வழங்குவதில் முறைகேடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியம், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் பாமக சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக மாநில துணைபொதுச்செயலாளர் கிட்டு தலைமையில், மதுரை புறநகர் மாவட்ட முருகன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இதில் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.