சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் மகளிர் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM)ன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 02.02.19 அன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஆலிமா சம்சாத் பேகம் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் ஆலிமா சாஜிதா முன்னிலை வகித்தார். இதில் sdpi கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சபியா சிறப்புரை ஆற்ற, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் காதர் முகைதீன் மற்றும் மாவட்ட செயலாளர் மைதீன் கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியாக மூன்று ஆண்டிற்கான புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட தலைவராக ஆலிமா சாஜிதா அவர்களும் மாவட்ட துணைத் தலைவராக தெளலத் பிவீ அவர்களும் மாவட்ட செயலாளராக சம்சு பீவி அவர்களும், மாவட்ட பொருளாளராக மரியம் பீவி அவர்களும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஆலிமா சம்சாத் பேகம் மற்றும் ஆயிஷா அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்க பட்டது. இதில் 70 க்கும் அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர். இறுதியாக ஆலிமா ஷகிலா நன்றியுரை ஆற்றினார். முதல் நாள் SDPl நிகழ்வில் தூத்துக்குடி தொகுதி, திரேஸ்புரம் கிளை கூட்டம் (01.02.19 அன்று > கிளை தலைவர் சிக்கந்தர் தலைமையில், கிளை செயளாலர் அப்துர் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் காதர் முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1). திரேஸ்புரம் பகுதியில் செயல்வீரர்கலை அதிகப்படுத்துவது.
2). புதிய பொறுப்பு கிளை தலைவராக முஹம்மது தாஹிர் தொடர்வது
3)அதிகமான கட்சி வளர்ச்சி நிதியை திரட்டுவது
4)விரைவில் ஆம்புலன்ஸ் பணியை தூத்துக்குடி பகுதியில் துவக்குவது. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
You must be logged in to post a comment.