6
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திமுக சார்பில் காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா மாலை அணிவித்தார். உடன் ஒன்றிய செயலாளர் சரவணன் அவைத் தலைவர் மாதவன் முன்னாள் ஒன்றிய செயலாளர் தயாநிதி பிரதிநிதி ராதாகிருஷ்ணன் ஆதிதிராவிட மாநகர அமைப்பாளர் தேவநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக சார்பில் வேலூர் மாநகர பொறுப்புக் குழு உறுப்பினர் சத்துவாச்சாரி பழனி , காட்பாடி சீனிவாசன் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். கோபி, கெளதமன், மோகன், துரை வேல், மோகன் உள்ளிட்ட மலர் கலந்து கொண்டனர்.
வேலூர், கே எம்.வாரியார்
You must be logged in to post a comment.