திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் உடுமலையில் நின்று செல்லும் சிறந்த நிகழ்வு உடுமலை ரயில் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட் யரா, துணை கோட்ட மேலாளர் மஞ்சு காணி, ரயில்வே பொறியாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர்கள், உடுமலையில் உள்ள ரோட்டரி லயன்ஸ் அமைப்புகள், வியாபாரிகள் சங்கம், ரயில் பயணிகள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் உடுமலை சுற்றுவட்டார பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் உடுமலையில் நின்று செல்லும் வகையில் போராடி பெற்றுத்தந்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் முயற்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.