தேனியிலிருந்து வழி தவறி மதுரைக்கு வந்த பெண் மீட்கப்பட்டார்…

மதுரை பெரியார் பேருந்து பகுதியில் அனைத்து மகளிர் காவல்நிலையம் (தெற்கு) பெண் காவலர்கள் ரோந்து பணியில் இருந்த போது, பெரியார் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண்ணை விசாரணை செய்ததில், தேனியில் இருந்து வழி தவறி மதுரைக்கு வந்துவிட்டதாகவும், திரும்ப தேனிக்கு போக தெரியவில்லை எனவும் கூறினார். இதுகுறித்து விசாரணை செய்ததில் மேற்படி பெண் தேனி மாவட்டம் தென் கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட முகவரியில் வசித்துவருகிறார் என தெரியவந்தது எனவே மேற்படி பெண்ணை தேனி மாவட்டம் தென் கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..