6
மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., உத்தரவுப்படி இன்று (22/01/2019) “இணையதள பாதுகாப்பு” என்ற தலைப்பில் சைபர் கிரைம் ஆய்வாளர் திரு.செந்தில் இளந்திரையன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திகேயன், மதுரை மாநகர் கோரிப்பளையம் பொன்முடியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான இணையதள குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துகொள்வது, சமூக வலைத்தளங்களை எவ்வாறு கையாளுதல், Smart Phones பயன்படுத்துதளினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் மற்றும் இணையதள வங்கி பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு இணையதள விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதில் 500 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.