திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ்.இஆ.ப அவர்கள் சில நாட்களுக்கு முன் தனது குழந்தையை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து அனைவருக்கும் முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளார்.
இன்று தனது சொந்த வாகனத்தில் (அரசு வாகனத்தை தவிர்த்து) மிக எளிமையாக குழந்தையோடு குழந்தையாக தை பொங்கல் விழா ஏழை எளிய குழந்தைகளுடன் கொண்டாடியது, சர்க்கரை பொங்கல் உண்டது, குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது இது போன்ற மாவட்ட ஆட்சியரின் நடை முறைகள் காண்பவர்களை மனம் நெகிழச்செய்கிறது. குழந்தைகள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக அனைவரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். அனைத்து குழந்தைகளும் மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.