தேனி அருகே எஸ்பி தனிபிரிவு போலீசாருக்கு கத்தி குத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி மருத்துவமனையில் அனுமதி…

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள சிதம்பரம் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ் பி தனிப்பிரிவு காவலர் ராஜசேகர் (32), என்பவரை குமணன்தொழு பகுதியை சேர்ந்த மாடு மேய்க்கும் தொழிலாளியான லட்சுமணன் குடிபோதையில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் காவலர் அனுமதி. தப்பி ஓடிய லட்சுமணனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் காவலர் ராஜசேகரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டார்.

செய்தி:- பால்பாண்டி, தேனி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..