5
இராமநாதபுரத்தின் பிரதான பகுதிகளில் மதுரை – இராமநாதபுரம் இடது ஓரம் நகராட்சிக்கு சொந்தமான 10 லட்சம் கொள்ளளவு குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இங்கு இன்று காலை துர்நாற்றம் வந்தது. இதன்படி, நகராட்சி பணியாளர்கள் குடிநீர் தொட்டியை பார்த்தனர். அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதையடுத்து ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். அவரது வலது கை கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கலாம் என கூறப்படுகிறது. கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.