8
வேலூர் அடுத்த காட்பாடி துர்கா மகாலில் ஜப்பான் ஷிட் டோராய் கராத்தே பள்ளியில் 44 – வது மாநில கராத்தே போட்டி நடைபெற்றது.கராத்தே பள்ளியின் தலைவர் மற்றும் திரைப்பட ஸ்டண்ட் நடிகர் வேலூர் கராத்தே A.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலம் முழுவதும் இருந்து 1000 க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர்கள் விச்சு, கெளதம், அபிஷேக், ஸ்ரீவித்யா ஆகியோர் கோப்பைகளை வழங்கினர்.
இதில் கராத்தே நிபுணர்கள் பழனி, கதிர்வேல், மகேஷ், பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.