திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட நகராட்சி உட்பட பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையினர் ,வருவாய் துறையினர், சுகாதாரத்துறையினர் என அனைத்து துறையினரும் பெட்டிக்கடை முதல் மளிகைக்கடை வணிக வளாகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தீவிரமான பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்….
இதன் ஒரு பகுதியாக இன்று நிலக் கோட்டை அருகே உள்ள பள்ளபட்டியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திடீரென அப்பகுதிகளில் உள்ள மளிகைக்கடை, ஹோட்டல்கள், பெட்டிக்கடைகள், மற்றும் சாலை ஓர தெருக்கடைகளில் பிளாஸ்ட்டிக் & பாலித்தீன் பயன்பாடு உள்ளதா? என சோதனை செய்தனர் இதில் பல கடைகளில் பாலித்தீன் கவர்கள், பிளாஸ்டிக்கப்புகள் தண்ணீர் பாக்கெட்கள் என ரூபாய் 10.000 மதிப்புள்ள தடை செய்யபட்ட பொருட்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
மேலும் தமிழக அரசு கடந்த 01-ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை தடை செய்துவிட்ட நிலையில் இவ்வாரான பாலித்தின் பயன்படுத்துவது சட்டவிரோதம் இதுமேலும் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணர்வு அறிவுரை கூறி எச்சரிக்கையும் செய்தனர்.
செய்தி:- நிலக்கோட்டை ராஜா
You must be logged in to post a comment.