நேற்று (02.01.2019) மதுரை மாநகர் வண்டியூர் சௌராஸ்டிராபுரத்தில் கதவு எண் 859-A ல் வசித்து வரும் ஆனந்தன் 53/19, த/பெ.சுந்தரகோபால் என்பவர் போலியான மருத்துவ படிப்பு சான்றிதழ் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளை விநியோகம் செய்துகொண்டு இருப்பதாக டாக்டர்.சதீஸ்ராகவ். MD, முதன்மை நகர்நல அலுவலர், மதுரை மாநகராட்சி என்பவருக்கு கிடைத்த தகவலின் படி அவர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் ஆனந்தன் போலியான மருத்துவர் எனதெரிய வந்தது. பின்னர் அவர் E3-அண்ணாநகர் ச&ஒ காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று, வழக்கு பதிவு செய்து, சார்பு -ஆய்வாளர் திரு.சுந்தரபாண்டியன் அவர்கள் போலி மருத்துவர் ஆனந்தனை கைது செய்தார்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.