Home செய்திகள் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க 2019ம் ஆண்டுக்கான காலண்டர் : S P முரளி ரம்பா வெளியிட்டு வாழ்த்து…

காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க 2019ம் ஆண்டுக்கான காலண்டர் : S P முரளி ரம்பா வெளியிட்டு வாழ்த்து…

by ஆசிரியர்
தூத்துதக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2019ம் ஆண்டுக்கா மாதாந்திர நாட்காட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா  வெளியிட்டு வாழ்த்தினார்.
தூததுககுடி மாவட்ட காவலதுறை அலுவலகத்தில் 1700
காவல்துறையினர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வரும் காவலர் கூட்டுறவு சிக்க நாணய சங்கம் சார்பாக 2019ம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டியை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், துணைகண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட அலுவலகம் காவல்துறை மற்றும் கூட்டுறவு சங்கத்தின் 1700 உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த மாதாந்திர நாட்காட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முரளி ரம்பா, வெளியிட காவலர் கூட்டுறவு சிக்க நாணய சங்கத்தின் தலைவரும் , சார்பு ஆய்வாளருமான ராதா கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அருகில் துணை தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பொன்ராமு, பயிற்சி ஏ.எஸ்.பி அல்பர்ட் ஜான் , தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் திரு. ஜெயப்பிரகாஷ், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வெளியீட்டு விழாவில் காவல் அலுவலக கண்காணிப்பாளர் சுடலைமணி நிர்வாகஸ்தர்கள் மற்றும் தலைமை காவலர்கள் துரைப்பாண்டி, முத்துக்கிருஷ்ணன், லூர்த்தவாஸ், சுமதி, சங்கத்தின் கணக்காளர் மாரிப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு மாதாந்திர காலண்டரை பெற்றுக்கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!