இராமநாதபுரம் மாவட்டம் ஓம் சக்தி நகர் 9 வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 45. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையை தொடங்கினார். இது தொடர்பாக 2000, 2002, 2007, 2009ல், 2012 தலா ஒரு வழக்கு, 2010 இல் 4, 2011 இல் 2 என 10 வழக்குகளில் சிறை சென்றார். அடிதடி வழக்குகளில் தொடர்புடைய இவர் 2007 இல் ரவுடி பட்டியலில் இடம் பிடித்தார். கஞ்சா வழக்கில் கைதாகி அடிக்கடி சிறை சென்ற ஜாமீனில் வெளியே வந்து கஞ்சா விற்பனையை தனது முழு நேர தொழிலாக்கி பல்வேறு இடங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்தினார். காலப்போக்கில் தனது வீட்டிலேயே கஞ்சா பதுக்கி வைத்து பொட்டலம் போட்டு விற்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச., 30) வீட்டில் கஞ்சா விற்ற சுரேஷை , கேணிக்கரை போலீஸ் எஸ்.ஐ., குகனேஸ்வரன் கைது செய்தார். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் கைது செய்தார். சுரேஷ் மீது 2000 முதல் 2018 டிச.30 வரை 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.