7
காட்பாடி வட்டாட்சியர் அலுவலக எதிரில் 21- அம்ச கோரீக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒரே நாளில் வாங்கிக் கொண்டிருந்த வருமான சான்று இருப்பிடச் சான்று, சாதி சான்று போன்ற பல சான்றுகளை இ- சேவை மையங்களில் மனு செய்து ரூ.60 கட்டணம் செலுத்தி விட்டு வாரக்கணக்கில் மக்களை அலைகழிக்கும் நிலை உள்ளது.
அந்நிலையை மாற்றி நேரடியாக கிராம நிருவாக அலுவலர்களே நேரடியாக சான்று வழங்க அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரீக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் ஜோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
வேலூரிலிருந்து கே.எம் வாரியார்
You must be logged in to post a comment.