தர்மபுரியில் பாமகவின் புதிய ஒன்றிய நிர்வாகிகள் பாராட்டு விழா..

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமணமண்டபத்தில் பாமகவின் புதிய ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக பாரட்டு விழா, கிளை பொருப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்குசாடி களப்பணியார்கள் நியமணம், வருகின்ற பாரளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை மற்றும் 2019 புத்தாண்டு வரவேற்க்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் முக்கிய தீர்மானங்களை நிறவேற்றப்பட்டது. 1. அடியாலத்தில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தடுப்பணை கட்டி தண்ணீர் கொண்டு வந்து ஜெர்த்தலாவ் ஏரி, புலிகரை ஏரி, பாப்பாரப்பட்டிஏரிகளுக்கு தண்ணீர் விட்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்பது. 2.தற்போது கிராமபகுதியில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகின்றது. குடிநீர் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுப்பது. 3. 2004-2005 பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின்சாரம் தயாரிக்க ரூ50 பிடிக்கப்பட்டது தமிழக அரசு 2017 ஆண்டு அந்த தொகை திரும்ப தரப்பட்டது அதை விவசாயிகளுக்கு திருப்பி கொக்க என தீர்மாணங்கள் நிறவேற்றப்பட்டது. இதில் தலைமை தொகுதி அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் சண்முகம், தேவேந்திரன், சரவணகுமாரி, வாசுநாயுடு அன்பழகன் முருசேகன், சின்னசாமி, வேலு, சின்னசாமி, பாலமுரளி,துரை, சின்னசாமி, சசிக்குமார் கண்ணன், கோவிந்தசாமி,யாரப், பாலாஜி,மகாதேவன், முனியப்பன், சுகுமார்,முனிராஜி, மாதையன் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

செய்தி: சிங்கார வேலு, தர்மபுரி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..