சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த தன் சகோதரியை காரில் அழைத்து வந்த கீழக்குயில்குடியை சார்ந்த அரவிந்தன் மற்றும் சகோதரி ஆகியோர் துவரங்குறிச்சி அருகே அதிகாரம் என்ற இடத்தருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் மதுரை மாவட்டம் அரவிந்தன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். இதில் அரவிந்தனின் அக்கா கோகிலா மற்றும் அவரது குழந்தை ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை உள்ளனர். அரவிந்தனின் சடலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.