6
வேலூரில் அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்து ரூ 2.50 கோடி நலத்திட்ட உதவிகளை செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். வேலூர் அரசு பொருட்காட்சி துவக்க விழா நேற்று (24/12/2018) இரவு நடந்தது. அதில் கலந்து கொண்ட செய்தி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் ராமன், எஸ்.பி பர்வேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சு.ரவி, லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள், குடியாத்தம் ராமு, கே.வி.குப்பம் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக செய்தி துறை இயக்குநர் சங்கர் நன்றி கூறினார்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்.
You must be logged in to post a comment.