இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயப்பன் சபரிமலை யாத்திரை சபா சார்பில் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜை விழாவில் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் மாலை அணிவித்த பத்தர்கள் மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் ஆடிப்பாடி ஊர்வலமாக சென்று சக்திவேல் முருகன் கோயில் அருகே நிறைவு பெற்றது. குருசாமி பாலசுப்ரமணியன் தலைமையில் ஐயப்பனை போற்றி பஜனை நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.