10
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பாலக்கோட்டில் திங்கள் கிழமை தோறும் வார சந்தை நடைபெறும். தமிழ்நாடு அரசு சில மாதங்களுக்கு முன்பு ஆடு மாடு சந்தைகளை, கேரளா, ஆந்திரா போன்ற வெளி வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிக்கப்பட்டுள்ளதால், சிறிய ஊர்களில் நடைபெறும் வார சந்தை கூடுவதை தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இதனால் மாட்டு வியாபாரிகள் மற்றும் மாட்டு கயிறு வியாபாரிகள் வியாபாரம் இல்லை என்று கவலையை தெரிவித்தனர். மேலும் இத்தடையினால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி
You must be logged in to post a comment.