கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை நாட்களை தொடர்ந்து, மக்கள் பல் வேறு இடங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால் அதி வேகம் மற்றும் கவனக்குறைவு உயிருக்கு சேதம் என்பது போல் இன்று (25/12/2018) பைபாஸ் சாலையில் தொடர்ச்சியாக மூன்று விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து காவல்துறையினர் விசாரித்து, சாலை விதிகளை பேணுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
செய்தி:- காளமேகம், மதுரை
You must be logged in to post a comment.