வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றது. நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்வு தள்ளி போனது.
இன்று (18/12/2018) அதற்காக கூட்டுறவு சார் பதிவாளர் (தேர்தல் அலுவலர் முன்னிலையில் ஒரு மனதாக எம்.ஆனந்தன் தலைவராகவும், அப்துல்லா துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதற்கான சான்றை கந்தன் வழங்க ஆனந்தன் அதிமுக கிழக்கு வேலூர் மாவட்ட செயலாளர் சு,ரவி துணை தலைவர் அப்துல்லா பெற்று கொண்டனர். நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் SRK அப்பு தகவல் தொழிற்நுட்ப பிரிவு செயலாளர் ராகேஷ்காட் ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி K.S. சுபாஷ் சோளிங்கர் சின்னதுரை காட்பாடி பகுதி செயலாளர் ஜனார்த்தனை், அண்ணா தொழிற்சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் பெல். தமிழரசன் சர்க்கரை ஆலை அண்ணா தொழிற்சங்க செயலாளர் முனிசாமி திருவலம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுலக்ஷனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்:- செய்தியாளர், வேலூர்
You must be logged in to post a comment.