6
சமீபத்தில் ஆம்பூரில் ஹனீபாராஜா என்ற சிறுமி தன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என காவல்துறையில் தன் தந்தை மீதே புகார் தெரிவித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பின்னர் அச்சிறுமியின் தைரியத்தை பாராட்டி அச்சிறுமியை ஆம்பூர் பகுதிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (14:12/2018) காலை ஆம்பூரில் உள்ள ஹனீபாஜாரா வீட்டிற்கு கலெக்டர் ராமன் நேடியாக சென்றார். அவர் மாணவி ஹனீபாஜாராவை சந்தித்து அவரது செயலையும், துணிச்சலான முடிவையும் பாராட்டினார். ஆம்பூர் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து மாணவிக்கு பரிசு வழங்கினார். பின்னர் மாணவியின் வீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை பணிகளை பார்வையிட்டார்.
கே, எம்.வாரியார்- செய்தியாளர், வேலூர்
You must be logged in to post a comment.