9
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம், இணையவழி சான்றிதழ், பட்டாமாறுதல் ஒப்புதல் செய்வதற்கு இணைய பயன்பாட்டு கட்டணம் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்கள் முன்பு இரவு நேர காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கடலாடி தாலுகா அலுவலகம் முன் வட்டச்செயலாளர் கா.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கடலாடி வட்டத்தில் 18 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.