Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் காவல்துறையில் பணியாற்றிய திருநங்கை தற்கொலை முயற்சி..வீடியோ வாக்குமூலம் ..

இராமநாதபுரம் காவல்துறையில் பணியாற்றிய திருநங்கை தற்கொலை முயற்சி..வீடியோ வாக்குமூலம் ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர் , கடந்த சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராக பணியில் சேர்ந்தார். ஆயுதப்படை குடியிருப்பில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் பணியின் போது இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயசீலன், தலைமை எழுத்தர் பார்த்திபன் ஆகியோர் தனது நடத்தை குறித்து தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். இதனால் எனது சாவிற்கு இவர்கள் 3 பேரும் தான் காரணம் எனக் கூறி எலி கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

பின்னர் அதை கவனித்த சக போலீசாரை அவரை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 3 வாரங்களுக்கு மேலாக இவர் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்துள்ளார். இதனால் பணிக்கு தவறாமல் வர வேண்டும் என உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது நடத்தை குறித்து யாரும் விமர்சிக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!