இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு உச்சிப்புளி கடற்படை விமானதளம் ஐ.என்.எஸ்.பருந்து சார்பில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் இன்று (03.12.18) ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடந்தது.
வானில் ஹெலிகாப்டர் சாகசங்களை பெண்கள், குழந்தைகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் செல்போன்களின் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நாளை (04.12.18) மாலை 4:15 மணி முதல் 4:45 மணி வரையிலும், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மாலை 4:45 மணி முதல் 5 : 30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.