காட்பாடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவரின் மகள் 10 வயது உடைய சிறுமி 5ம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர்களது உறவினர் அதாவது தாய்மாமன் கந்தசாமி (47) நேற்று மாலை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பாலியியல் தொல்லை கொடுத்து உள்ளான்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அடி கொடுத்து காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை போக்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இதே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார்,செய்தியாளர்,வேலூர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..