9
கீழக்கரை சாலைகளில் தொடரும் பிரச்சினையாக உள்ள விசயம் சாலைகளில் கொட்டப்படும் மணல்கள். புதிய வீடு கட்டுவதற்காக மணல் கொட்டுவது தவிர்க்க முடியாத விசயமாக இருந்தாலும், அதை முறையாக கட்டிட பகுதிகளில் கொட்டாமல் வாகனங்கள் செல்லும் சாலைகளை மறைத்து மணல் மற்றும் ஜல்லிகளை கொட்டி வைப்பது பொது மக்களுக்கு இடையூறு மட்டுமல்லாமல், வாகனங்கள் விபத்துக்கும் காரணமாக அமைகிறது.
இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் பல கடுமையான எச்சரிக்கைகள் விடுத்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் இவ்விணயத்தை கருத்தில் கொள்வதாகவே இல்லை. நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுமா??
You must be logged in to post a comment.