திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது….

திண்டுக்கல் தோமையார்புரம் அருகிலுள்ள நிலா நகரை சேர்ந்த முபாரக் என்பர் இவரது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா 7 மூடைகள் (கணேஷ் 3, கூளிப் 3, விமல் 1) ஆகியவைகளை SP தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் கைப்பற்றினர். மேலும் முபாரக்கை(49) கைது செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..