Home செய்திகள் கமுதி சேதுபதி மன்னர் கோட்டையில் மரபு வார விழா…

கமுதி சேதுபதி மன்னர் கோட்டையில் மரபு வார விழா…

by ஆசிரியர்

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ,கமுதி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இனைந்து மரபு வார விழா கமுதி சேதுபதி மன்னர் கோட்டையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எம்.எஸ். முகமது அல்லாமா மஷ்ரித் தலைமை வகித்தார்,

தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் சு.உமா சங்கரி முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் அரசு கலை ,அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் நீரா.பொன்முத்து கமுதி கோட்டை , சேதுபதி மன்னர்கள் ஆட்சி முறை பற்றி பேசினார். இன்றைய மாணவர்களுக்கு தொன்மை இடங்கள் பற்றிய தேடல்கள் மிக குறைவாக உள்ளது. நமது முன்னோர் வாழ்ந்த இடங்கள், மன்னர்கள் கட்டிய கோட்டைகள், கோயில்கள், கல்வெட்டுகள, முன்னோர் பயன்படுத்திய தொன்மை பொருட்கள் அதிகளவில் கமுதி பகுதியில் உள்ளது என்றார். கமுதி கோட்டை கி.பி1713 முதல் கி.பி.1725 வரை ஆட்சி செய்த முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் கமுதி கோட்டை கட்டினார் என்பது உண்மை வரலாறு என்றார். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கமுதி வட்டார ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன் வரவேற்றார். வணிகவியல் துறை ஆசிரியர் இரா.மணிகண்டன் ஏற்பாடு செய்தாரர். ஆசிரியர்கள் எஸ். அமிர்தவல்லி, கே.அழகர், அ.மணிகண்டன், சமூக ஆர்வலர்கள் உத்திரச்செல்வன், கனகஅரசு மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!