கோவில்பட்டி ஜமீன்பேட்டை தெருவில் 50க்கும் மேற்ப்பட்ட குடியிறுப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் பூ மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாறுகால் சரிவார சுத்தம் செய்யப்படவில்லை என்றும், சாலைகளில் கழிவு நீர் குப்பைகளை போட்டு விட்டு அப்படியே சென்று விடுவதாகவும், அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் தொடர்ச்சியாக வீசிய காரணத்தினால் பொது மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது மட்டுமின்றி, உணவு கூட உண்ண முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு பலமுறை தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் பாலமுருகன் என்பவரது தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையெடுத்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் விரைந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனை தொடர்ந்து பொது மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
You must be logged in to post a comment.