இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதில் எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் 5 வது தெருவில் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய 85 வயது மூதாட்டி இந்து மதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த அவரது தங்கை சாந்தம் (65) பரமக்குடி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார். அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகிறார்.
You must be logged in to post a comment.