மதுரை மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கை உறைகளும் இல்லாமல் பணி செய்வதால் துப்புரவு தொழிலாளர்களுக்கு பல்வேறு நோய் தொற்றுக்களும் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் இவர்கள் பாதுகாப்பில்லாமல் அரசு மருத்துவமனை போன்ற பகுதிகளில் பணி புரிவதால், மருத்துவமனையிலிருந்து கொட்டப்படும் கழிவு பொருட்களால் கையில் காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் மழைக்காலம் என்பதால் மழை நீர் தேக்கம் இருப்பதால், மாநகராட்சி பணியாளர்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி வாய்ப்புள்ளது. இதை கவனத்தில் கொண்டு அனைத்து துப்புரவு தொழிலாளருக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
செய்தி: மதுரை, காளமேகம்
You must be logged in to post a comment.