அண்ணா பிறந்த நாள் விழா போட்டிகள் அண்ணா 110வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் முத்தமிழ் அரங்கில் நடந்தது. பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
மேலும் இந்நிகழ்வில் உயர் நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுப. தங்கவேலன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பரகு வரவேற்றார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம் , 2 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.2 ஆயிரம், நான்காம் பரிசு ரூ 1,000 வழங்கப்பட்டது. மாநில இளைஞரணி துணை செயலர் பைந்தமிழ் பாரி, முன்னாள் அமைச்சர்கள் மு.தென்னவன், வ. சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி இணை செயலர் கிருபானந்தம், நகர் செயலர்கள் கார்மேகம் (இராமநாதபுரம்), பசீர் அகமது (கீழக்கரை), ராமேஸ்வரம் நகர் பொறுப்பாளர் கே.இ நாசர் கான் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்),
You must be logged in to post a comment.