Home செய்திகள் கோவில்பட்டியில் வீட்டு பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை..

கோவில்பட்டியில் வீட்டு பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை..

by ஆசிரியர்

கோவில்பட்டி மேற்கு பார்க் ரோட்டை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகன் சத்யநாராயணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது கோவில்பட்டியில் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சத்யநாராயணன் நேற்று மாலையில், உடல் நிலை பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தாக கூறப்படுகிறது. பின்னர் இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு கேமராக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதுகுறித்து சத்யநாராயணன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் டி.எஸ்.பி. ஜெபராஜ், காவல் ஆய்வாளர் விநாயகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ள சென்ற மர்ம ஆசாமிகள், வீட்டில் வைத்திருந்து ஒரு புல் மது பாட்டிலில் பாதியை அருந்தி விட்டு சென்றதும் தெரிய வந்தது. கோவில்பட்டியில் இரு பார்க் சாலையும் எப்போது அதிகளவில் வாகனங்கள் சென்று வரும் சாலை, அப்பகுதியில் மெயின் சாலையில் உள்ள வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!