சிவகிரியில் டிராக்டர் கவிழ்ந்து தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் சம்பவம் நடந்த இடத்தில் பரிதாபமாக இறந்தார். சிவகிரி குமாரபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் சந்தண பாண்டியன் இவருடைய மகன் மீனாட்சி சுந்தரம் வயது18. இவர் இராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஎ படித்து வருகிறான்.
சம்பவத்தன்று முருகன் என்பவருக்கு சொந்தமான வயலில் விவசாய வேலைக்கு அவரின் டிராக்டர் வண்டியில் வேலைக்கு செல்லும் போது சிவகிரி க்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பேயன் ஆற்றுப் பகுதியில் செல்லும் போது திடிரென்று டிராக்டர் குப்புற கவிழ்ந்து இதில் இருந்த மீனாட்சி சுந்தரம் டிராக்டரின் டயர் இவரின் மீது ஏறியதில் பலத்த காயம் ஏற்பட்டது சம்பவம் நடந்த இடத்தில் பரிதாபமாக இறந்தார் இது குறித்து இறந்த மாணவரின் தந்தை சந்தண பாண்டியன் சிவகிரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர் பிரேதத்தை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை க்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரியின் மாணவர் பரிதாபமாக இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
செய்தி:- கடையம் பாரதி.
You must be logged in to post a comment.