மதுரையில் தமிழ்நாடு கிரானைட் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் கூட்டம்..

மதுரை மேலூரில் தமிழ்நாடு கிரானைட் குவாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் அவை சார்ந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், நீண்டகாலமாக மூடிக்கிடக்கும் கிரானைட் குவாரிகளை திறந்து பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஒளியேற்றி வழிவகை செய்திடவும், மதுரை மாவட்டத்தில் போட்ட வழக்குகளை குவாரிகளின் வழக்கை வேகப்படுத்தி போர்க்கால அடிப்படையில் முடிவு செய்து குவாரிகளை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மாநில அரசை வலியுறுத்தப்பட்து.

அதே போல் வழக்கில் இல்லாத கிரானைட் குவாரிகளை திறக்க அனுமதிக்குமாறும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற்றது. அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கதிரவன், மாநில தலைவர் பொற்கைப் பாண்டியன், மாநில செயலாளர் கோபால கிருஷ்ணன், மாநில பொருளாளர் முரளி, மாநில துணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட தலைவர் மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை செய்தியாளர்:- கனக முணியராஜ்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..