8
காட்பாடி வட்டாட்சியராக திருமதி ஜெயந்தி பணிபுரிந்து வந்தார். அவர் பணிக் காலம் சிறப்பான முறையில் இருந்தது. தனக்கு கீழ் பணி புரிந்த அதிகாரிகள் ஊழியரை கடும் சொல் தவித்தது அன்பாக நடத்தினார். பத்திரிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொண்டார்.
இந்நிலையில் அவர் ராணிப் படை நில எடுப்பு தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் வட்டாட்சியர் ஜெயந்திக்கு அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் துணை வட்டாட்சியர் ராஜேஸ்வரி கலந்துகொண்டு சால்வை மற்றும் நினைவு பரிசு வழங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வட்டாட்சியர் ஜெயந்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
கே.எம்.வாரியார்:- செய்தியாளர்,வேலூர்
You must be logged in to post a comment.