திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கைலாசம் பட்டி காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபருக்கு திடீர் காய்ச்சல். மேலும் இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் காய்ச்சலால் கடந்த 07.11.2018 அன்று 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பலியாகி உள்ளான். இதுவரை காய்ச்சலுக்கான காரணம் குறித்து கண்டறியப்படவில்லை. தொடர்ந்து இப்பகுதியில் வீட்டுக்கு ஒரு நபர் காய்ச்சலால் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாளில் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாய் பிரசாத் – 2 வயது, புஷ்பலதா – 24, வனிதா – 17, பாண்டீஸ்வரி – 37, பாண்டியம்மாள் – 56 ஆகியோருக்கு திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இப்பகுதியில் காய்ச்சலுக்கான காரணம் குறித்து தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கடந்த 2 வருடமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல முறை புகார் அளித்தும் ஊராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்சமயம் அடிகுழாய் மூலம் பெறப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது டிராக்டர் மூலம் விலைக்கு தண்ணீர் வாங்கி குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்கள் குடிக்கும் குடிநரீரினை தர பரிசோதனை செய்து இப்பகுதிக்கு தேவையான குடிநீர் வழங்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
S. நாகராஜன்:- மாவட்ட செய்தியாளர்
You must be logged in to post a comment.