7
கீழக்கரை – ஏர்வாடி சாலையில் இன்று (02/11/2018) இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து இன்று மதியம் அதே இடத்தில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் லாரியின் ஓட்டுனருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாலும், அதிகமான கல்வி நிலையங்கள் இருப்பதாலும் வேக தடை மற்றும் வேக கட்டுப்பாடு தடுப்பு (Barrier Guard) அமைத்து, விபத்துக்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.