கீழை மாநகரில் புதியதோர் உதயமாக “LASSI SPOT” இன்று 01/11/2018 கீழக்கரையில் பல முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் 34 கிளைகள் கொண்ட லெஸ்ஸி ஸ்பாட்டின் 35 வது கிளையாகும் கீழக்கரை கிளையாகும். கீழக்கரை கிளையை லெஸ்ஸி ஸ்பாட் நிறுவனர் கர்நாடகாவை சார்ந்த அப்சர் பாஷா காலை 10 மணியளவில் திறந்து வைத்தார். அவரிடம் இருந்து முதல் வியாபாரத்தை கட்டிடத்தின் உரிமையாளர் ஜெமீல் பெற்றுக் கொண்டார்.
இந்நிறுவனம் பொதுமக்கள் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் கீழக்கரை ஜும் ஆ பள்ளி எதிர்புறம் அமைந்துள்ளது. இத்திறப்பு விழாவில் SDPI மாநில பொது செயலாளர் பி.அப்துல் ஹமீது, கிழக்கு தெரு ஜமாத் துணை பொருளாளர் அஜிகர், ஜூம்மா பள்ளிஆலிம், கீழக்கரை டவுன் காஜியார் காதர் பக்ஸ், ஜமாத்தார்கள், ஆலிம்கள், SDPI கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், மேற்கு மாவட்ட தலைவர் நூருல் ஜியாவுதீன் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.