10
ஆம்பூர் அருகே மூதாட்டியின் காதில் இருந்த ஒரு சவரன் தங்க நகையை பறித்து வாலிபர் தப்பி ஓட்டம்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பகுதியை சேர்ந்த காந்தம்மாள் என்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரின் காதில் இருந்த ஒரு சவரன் தங்க நகையை பறித்து தப்பியோட்டம் எடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர்:-கே.எம்.வாரியார்.
You must be logged in to post a comment.