8
தேசிய செய்தியாளர் தினத்தை முன்னிட்டு இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றம் சார்பில் ஒளி பட போட்டி நடக்கவுள்ளது.
“கதை சொல்லும் படங்கள்” என்ற தலைப்பிலான இப்போட்டியில் 2018 ஜன 1. முதல் அக்.31 வரை நாளிதழில் வெளியான, வெளியாகும் படங்கள் (இராமேஸ்வரம் செய்தியாளர் மன்ற ஒளி ஓவியர்கள் மட்டும்). நடப்பாண்டு ஜன.1 முதல் அக்.30 வரை எடுக்கப்பட்டு பிரசுரமாகாத படங்கள் (இராமநாதபுரம் மாவட்ட நாளிதழ், வார இதழ் ஒளி ஓவியர்கள் மட்டும்). இப்போட்டியில் பங்கேற்போர் தங்கள் பெயரை பதிவு செய்ய அக்.31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தோர் படங்களை தேர்வுக்கு அனுப்ப நவ.5 கடைசி நாளாகும்.
மேலதிக விவரங்கள் அறிய 94431 09555 என்ற அலைபேசி எண்ணில் இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.