Home செய்திகள் இராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..

இராமநாதபுரம் டிஐஜி முகாம் அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் படுகொலை..

by ஆசிரியர்

இராமநாதபுரம் டிஜஜி முகாம் அலுவலகம் செல்லும் வழியில் வெடி குண்டு வீசி இருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை சூரப்புலி சுப்ரமணியன் மகன் கார்த்தி 36. இவரது நண்பர் குண்டு விக்கி 32. இவர்கள் இருவரும்  நீதிமன்றம் சென்று விட்டு, மாலை 5:30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் திரும்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழி மல்லம்மாள் கோயில் பகுதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு காரில் காத்திருந்த கும்பல் இருவர் மீது வெடிகுண்டு வீசியது.

இதில் நிலை குலைந்து இரு சக்கர வாகனத்தை விட்டு தப்பி ஓடிய இருவரையும் டிஜஜி முகாம் அலுவலகம் பகுதியில் வைத்து அக்கும்பல் நீண்ட அரிவாளால் வெட்டியது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் கேணிக்கரை போலீசார் கைப்பற்றிய கார்த்தி, விக்கி உடல்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். கடந்த மே 20 இல் வாலாந்தரவை அருகே காதணி விழா நடந்த வீட்டில் திறந்த வெளியில் இரவில் தூங்கிய பூமிநாதன், விஜய் ஆகியோர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வாலாந்தரவை கார்த்தி உள்பட 20 பேர் மீது கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.

இந்த இரட்டை கொலை தொடர்பான முன் விரோதத்தில் பழிக்குப் பழியாக இந்த இரட்டை கொலை 5 மாதம் கழித்து நடந்துள்ளது. இதனால் ராமநாதபுரம், வாலாந்தரவையில் பதற்றம் நிலவுகிறது.  கொலை நடந்த இடத்தை டி ஐ ஜி காமினி, எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பார்வையிட்டனர்.  இதற்கிடையில்  போலீசில் வாலாந்தரவை பாஸ்கரன் 40,  முரளி 21, அர்ஜீன் 25, ரூபன் 25,  முருகேசன் 37 ஆகியோர் தப்பிச் சென்ற  காருடன் நயினார்கோவில் போலீசில் சரணடைந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!