Home செய்திகள் முதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..

முதியோர் வாழ்வு நாள் இறுதி காலத்தில் மன அமைதியாக இருங்கள் : மாவட்ட ஆட்சியர் பேச்சு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் சமூக நலத்துறை, ஹெல்ப்பேஜ் இந்தியா, முதியோருக்கான முதியோர் அமைப்பு ஆகிய இ சார்பில் உலக முதியோர் தின விழா உச்சிப்புளியில் நடந்தது.

முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார். அவர் பேசுகையில்: ஒவ்வொரு வாழ்க்கையிலும் இளமை பருவம் போல் முதுமை பருவமும் ஒரு அங்கம் தான். வயதாகி விட்டது என்ற தாழ்வு மனப்பான்மையை போக்கி எண்ணங்களை இளமை வைத்துக் கொண்டு, சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். பிரச்னைகள் எதுவானாலும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை பற்றிய சிந்தனையை விட்டொழிக்க வேண்டும். யாரையும் சார்ந்து வாழாமல் என்னால் இயலும் என்ற தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். வாழ்வின் இறுதி கால கட்டத்தை மன அமைதி, இருக்க கற்று கொள்ள வேண்டும் என அவர் பேசினார்.

மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு இயக்குநர் இளங்கோ ராஜரத்தினம், திட்ட மேலாளர் கார்த்திக் ராஜா, ஹெல்ப் பேஜ் இந்தியா மாநில தலைவர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் கயிலைச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்கிணற்றுவலசை டாக்டர் எம்ஜிஆர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, உச்சிப்புளி நேஷனல் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தன.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!