ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா..

கமுதி அருகே ஆண்கள் மட்டும் வணங்கிய பெண் தெய்வ வழிபாடு விநோத திருவிழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராம கண்மாய் கரை எல்லைப்பிடாரி அம்மன் பீடம் புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி ஒரு வார காலத்திற்கு கோயில் இருக்கும் பகுதிக்கு, சொந்த காரணங்களுக்காகவோ, விவசாய பணிகளுக்காகவோ பெண்கள் அனுமதிக்கபடுவதில்லை.  திருவிழாவை முன்னிட்டு 13.10.2018 இரவு 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து, கைக்குத்தல் பச்சரிசி சாதம் வடித்து, 50 செம்மறி கிடாய் பலியிட்டு, சாதம் உருண்டை பிடித்து எல்லை பிடாரி அம்மனுக்கு படையலிட்டனர்.

இதன் பின்னர் அம்மன் பீடத்திற்கு 14.10.18 காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு படைத்த சாத உருண்டைகளை பனை ஓலையில் வழிபாட்டு சென்ற ஆண்களுக்கு பறிமாறப்பட்டது. எஞ்சிய சாத உருண்டைகள் அங்கேயே குழி தோண்டி புதைத்து செல்வது வழக்கம். ஒரு வயது முதல் வயதானோர் வரை ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இத்த திருவிழாவில் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..