இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்பப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 88வது பிறந்த தின எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தலைமை ஆசிரியர் கோமகன் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் ரவி, கிராமக் கல்வி குழு பொருளாளர் மலை ராஜன் முன்னிலை வகித்தனர். ஏவுகணை நாயகன் கலாம் பேச்சு போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சத்யா, துணைத் தலைவர் தேவி கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியை திவ்யா ஏற்பாடு செய்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.