8
கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்வி குறியாகவே மாறிவிட்டது, நகராட்சியின் மெத்தனப் போக்கால். கடந்த பல வருடங்களாக தனியார் நிறுவனத்தால் சேவை நோக்கில் செய்து வந்த சுகாதார பணியையும் நிறுத்திவிட்டார்கள். அரசாங்கமே தன் பணியை செய்வது பாராட்டுக்குரியது, ஆனால் கீழக்கரையில் நிலைமை தலைகீழ், சுகாதாரம் என்பது சீர்குலைந்து கொண்டே வருகிறது.
மேலே நீங்கள் காணும் புகைப்படங்கள் சிறுவர்கள் அதிகமாக செல்லும் ஹமீதியா தொடக்கப்பள்ளி பகுதி. இது போன்ற இடங்களே கவனிப்பாரற்று கிடக்கும் பொழுது வேறு இடங்களைப் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. என்று நகராட்சி உறக்கத்தில் இருந்து விழிக்கிறது என்று பார்ப்போம்.
செய்தி:- J.சித்திக்
You must be logged in to post a comment.